வா நண்பனே!
வயலுக்கு செல்லலாம்!
சேற்றில் கால் வைத்து சோற்றை நாம் செய்யலாம்!
படித்து படித்து பட்டதாரி ஆகி வெளிநாடு சென்ற காலம் போகட்டும்!
மறந்து மறந்து தாய்மொழி மறந்து தாய்நாட்டை மறந்த காலம் மறையட்டும்!
இனி உள்ளூரிலே உழைத்திடுவோம் உழவன் என்றாலும் பெருமை அல்லவா!
நம் நாட்டை நாம் வளர்த்திடுவோம் நம் நாகரீகங்கள் புதுமை அல்லவா!
இளைஞர் கூட்டம் இணைந்துவிட்டால் இன்பம் எங்கும் பரவி நிற்குமே!
வாலிபர் கூட்டம் வயலில் நடந்தால் வறண்ட நிலமும் பசுமை காணுமே!
Our Events
Comments are closed.